September 24, 2023

உலகநாயகன் கமல்ஹாசன் கட்சியில் இணைந்த புதுவை மக்கள்.!

உலகநாயகன் கமல்ஹாசன் கட்சியில் இணைந்த புதுவை மக்கள்.!
உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்து தீவிர அரசியியலில் இறங்கியுள்ளார். மக்களிடமும் இவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது.
 
இந்நிலையில் இன்று புதுச்சேரியில் பல்வேறு கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள்  உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் பிரதீப் குமார் அவர்களின் தலைமையில் பூவை ஜெகதீஷ்குமார் அவர்களின் ஏற்பாட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளனர். 
கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு பல்வேறு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து வருகின்றனர். மேலும் இவர்கள் சமூக பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *