March 21, 2023

ஒரு குப்பைக் கதை @ விமர்சனம்

ரெட்  ஜெயன்ட் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட , இயக்குனர் முகமது அசலம்

பிரபல நடன இயக்குனர் தினேஷ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மனிஷா யாதவ் நடிக்க யோகிபாபு, ஜார்ஜ், ஆதிரா பாண்டி லட்சுமி , சுஜோ மாத்யூஸ், கிரண் ஆர்யன் , கோவை பானு, செந்தில் லலிதா உடன் நடிக்கிறார்கள்

,காளி ரங்கசாமி எழுதி இயக்கி இருக்கும் படம் ‘ கதையை பார்ப்போம்

கூவத்தின் கரையில் பிறந்து வளர்ந்து , சென்னையில் குப்பை அள்ளும் வேலை செய்யும் மாநகராட்சி ஊழியனான ஓர் இளைஞன் ( மாஸ்டர் தினேஷ்) , 

இவருக்குத் திருமணம் செய்து வைக்க இவரது அம்மா பெரும்பாடுகிறார். ஆனால் பொண்ணுதான் கிடைத்தபாடில்லை. குப்பை அள்ளுகிறார் என்பதாலேயே பெண் கிடைக்காமல் போகிறது. வேறு வழியில்லாமல் ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்பார்களே என்ற நினைப்பில் பொய் சொல்லியாவது திருமணத்தை நடத்தி வைக்கும் முடிவுக்கு வருகிறார்கள்.

வால்பாறையில் ஒரு பெண் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கே செல்கிறார்கள். அங்கே மணிஷா யாதவை பார்த்த உடனேயே தினேஷுக்கு பிடித்துப் போய்விடுகிறது. மணிஷாவுக்கும்தான்  தினேஷ் சென்னையில் ஏதோ கிளார்க் வேலை பார்ப்பதாக புரோக்கர் பொய் சொல்லியிருப்பதை தெரிய தினேஷ்  மணீஷாவின் அப்பாவை தனியே அழைத்து உண்மையைச் சொல்லி விடுகிறார். அவருடைய நல்ல மனதை எண்ணிய மணிஷாவின் அப்பா அவருக்கே தன் மகளைத் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்.          

ஆனால் இந்த வேலை விஷயத்தை மட்டும் மகளிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறார். ஒரு கட்டத்தில் குப்பை அள்ளுளும் வேலை தெரியவருகிறது இதனால்  தினேஷ் யை வெறுக்கிறாள்அவனோடு வாழ்ந்து குழந்தைக்கு தாயாகிறாள் .

பிரசவத்துக்கு தாய் வீடு போன அவளை மீண்டும் கூட்டி வரப் போனால்,  பிள்ளையோடு என்னால் கூவக்கரையில் வாழ முடியாது என்கிறாள்

  அந்தக் குடிசைப் பகுதியின் சூழல் என் குழந்தையை வளர்க்க ஏற்ற இடம் அல்ல என்கிறார் மணிஷா.  இதையடுத்து தினேஷ் தனது சூப்பர்வைஸரின் அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டில் வாடகைக்கு குடி போகிறார் .குடி போகிறார். அதே அபார்ட்மெண்ட்டில் எதிர் வீட்டில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்யும் சுரேஷ், மணிஷாவின் அழகைப் பார்த்து ரசிக்கிறார். மணிஷாவை தன் வலையில் விழவைக்கிறான்  நடந்தது என்ன என்பதே இந்த படம் .காணாமல் போன அதிர்ச்சியில் குடிகாரனாகிறார் தினேஷ். மணிஷாவை பல இடங்களில் தேடி அலைகிறார். இந்த மன உளைச்சலில் தினேஷின் தாயும் இறந்து போகிறார் காணாமல் போன தன்  மனவி மணிஷாவையும், குழந்தையையும் கண்டுபிடித்தாரா இல்லையா..?தினேஷ். முடிவு என்ன ஆனது..? புதிய கதை களம் அமைத்திருக்கிறnர் கதை, திரைக்கதையில் அழுத்தமான இயக்கத்தையும் கொடுத்திருக்கும் அறிமுக இயக்குநர் காளி ரங்கசாமி பெரும் பாராட்டுக்குரியவராகிறார்

மனைவியால் ஏற்பட்ட அவமானத்தால் மொடாக் குடிகாரன் ஆகிறான் என்பதை  அழகாக விளக்குகிறது திரைக்கதை . 
 
அதே போல பப் , பார்ட்டி ,  தண்ணி தம் என்று சுத்தும் ஒரு பெண் கூட , “கல்யாணத்துக்கு முன்னாடிதான் இந்த ஜாலி எல்லாம் .
 
ஒரு லெவல்ல அப்பா அம்மா சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவனுக்கு உண்மையா வாழ்ந்துடணும்” என்று சொல்ல , அதைக் கேட்டு கதாநாயகி கூனிக் குறுகும் காட்சியும் அருமை .
“என் புள்ள அங்க வாழ்ந்தா , அம்மா ஆத்தான்னு பேசாது

ங்கோத்தான்னுதான் பேசும்” என்று கதாநாயகி சொல்லும் வசனம் பளீர்

கதை நாயகனான மிக இயல்பாக அளவோடு ஆழமாக அழுத்தமாக நடித்து அசத்தி மனம் கவர்கிறார்  மாஸ்டர் தினேஷ் .
 
மனைவி ஓடிப்போனதை பீரோவை திறந்து பார்த்து உறுதிசெய்து உடைந்து போகும் காட்சியில் நெகிழ வைக்கிறார் .  அதேபோல் ஒவ்வொரு பெண்ணுக்கும், தனது கணவன்மார்கள் எப்படி அமைய வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்குமே.. அந்த எதிர்பார்ப்பு கிடைக்காமல் போகும்போது ஏற்படும் விரக்தி, ஏமாற்றத்தில் அது தானாக தேடி வரும்போது அதனை ஏற்றுக் கொள்ளும் அளவுக்குச் செல்வது இயற்கை என்பதையும் தனது நடிப்பிலேயே மிக அழகாக காண்பித்திருக்கிறார் மணிஷா                               எழுத்து, இயக்கம் – காளி ரங்கசாமி, ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, இசை – ஜோஷ்வா ஷ்ரிதர், பின்னணி இசை – தீபன் சக்ரவர்த்தி, நடனம் – தினேஷ் மாஸ்டர், சண்டை பயிற்சி – பயர் கார்த்திக், தயாரிப்பு நிர்வாகம் – டி.ஆறுமுகம், இணை இயக்கம் – அண்ணாதுரை, சீகுட்டி, வ.முத்துக்குமரன், உடைகள் – மணி, ஒப்பனை – குமார், புகைப்படங்கள் – மோதிதால், மக்கள் தொடர்பு – ஜான், டிஸைன்ஸ் – Dot X Media Solutions.படத்தின் அனைத்து தொழிநுட்ப கலைஞர்களுக்கு பாராட்டுக்கள்  படம் ஒரு குப்பையில்  கிடைத்த மரகதகற்க்கள் அனைவரும்பார்க்க வேண்டிய படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *