
இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ் தாணு விளக்கமளித்தார்
“ஜி.பி.செல்வகுமாருக்கும், கபாலி படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. செல்வகுமார் கபாலி படத்தை வாங்கவில்லை, விநியோகஸ்தர் வேணுகோபாலுக்கு சாட்சிக் கையழுத்துப் போட வந்தவர் தான் செல்வக்குமார் .

தியேட்டர் எடுத்த வகையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் இது வரை, ரூ 61 லட்சம் அவருக்கு நான் உதவியிருக்கின்றேன்.
கபாலி படம் நஷ்டம் என கூறுவது முற்றிலும் பொய். கபாலி மாபெரும் வெற்றி படம், சென்னையில் மட்டுமே 13 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது தயாரிப்பாளரான நானே சொல்கிறேன் படம் வணிகரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது .
யாருக்காவது ஒரு கஷ்டம் என்றால் அவர்களை அழைத்து பிரச்னையைக் கேட்டு உதவி செய்வது சூப்பர்ஸ்டார் ரஜினியின் பழக்கம்,அதைப் பயன்படுத்தி ரஜினியை ஏமாற்றத்தான் கபாலி நஷ்டமென்று சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள்..

தற்போது கபாலி படம் நஷ்டம் என்று பொய்களைக் கூறி ரஜினி சாரின் காலா படம் வெளியாகவிருப்பதை முன்னிட்டுத் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். கடைசியில் நீதியே வெல்லும் ” என்றார் எஸ் தாணு .