கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள கார்த்தி-17 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
இதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், படத்தொகுப்பாளர் ரூபன், தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் ,
இயக்குநர் ரஜத் ரவிசங்கர் , 2D Entertainment ராஜசேகர் பாண்டியன் , ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவ், இயக்குநர் பாண்டிராஜ் ,இயக்குநர் மாதேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சிவகுமார் கிளாப் அடித்து படபிடிப்பை துவக்கி வைக்க சூர்யா கேமராவை இயக்கி வைத்தார்
வெற்றி பெற்ற “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தை தொடர்ந்து கார்த்தி , ரகுல் பிரீத்சிங் ஜோடி மீண்டும் இப்படத்தில் இணைகிறார்கள் .
மேலும் பிரகாஷ்ராஜ் , ரம்யா கிருஷ்ணன் , RJ விக்னேஷ் , அம்ருதா , ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள் . இவர்களுடன் முக்கிய வேடத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார்.
இப்படம் மூலம் ரஜத் ரவிசங்கர் கதை திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டராக அறிமுகமாகிறார்.
இவர் ,”எங்கேயும் எப்போதும்” இயக்குநர் சரவணன் , ,பிரபல இந்தி இயக்குநர் அனுராக்காஷ்யப் ,இயக்குநர் R.கண்ணன் இவர்களுடன் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.
படத்திற்கு,
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு : R வேல்ராஜ்
எடிட்டிங் : ரூபன்
கலை : ஜெயஸ்ரீநாராயணன்
ஸ்டன்ட் : அன்பறிவ்
பாடல்கள் : கபிலன் , தாமரை , விவேக்
நிர்வாக தயாரிப்பு : K.V.துரை
அஸோஸியேட் தயாரிப்பு : ஜெய் ஜெகவீரன்.
படத்தை ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க – பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லஷ்மண்குமார் தயாரிக்கிறார் .இவர், சூர்யா நடித்த சூப்பர் ஹிட்டான :சிங்கம்2” படத்தை தயாரித்தவர் .
தற்போது திரிஷா நடிப்பில் R. மாதேஷ் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் “மோகினி“ படத்தை தயாரித்து வருகிறார்.
சென்னையில் துவங்கிய படப்பிடிப்பு , தொடர்ந்து யுரோப் நாட்டில் 15 நாட்களும் , ஹைதராபாத் , மும்பை , இமயமலை பகுதிகளிலும் உருவாகிறது.