September 24, 2023

வில்லிவாக்கம் பகுதியில் ரோந்து காவலரை பணி செய்யவிடாமல் தடுத்த மூன்று நபர்கள் கைது

வில்லிவாக்கம் காவல் நிலைய தலைமைக்காவலர் வெங்கடேசன் என்பவர்  நேற்று (04.04.2018) காலை 9.00 மணியளவில் வில்லிவாக்கம், எம்.டி.எச் சாலை, பாரதி நகர் சந்திப்பில் ரோந்து பணியிலிருந்த போது அங்கு குடிபோதையில்  நின்றுகொண்டிருந்த  மூன்று நபர்களிடம் விசாரணை செய்த போது அவர்கள் தகாத வார்த்தைகள் பேசியுள்ளனர். மேலும் தலைமைக்காவலரிடம் வீண்தகராறு செய்து வாக்குவாதத்தில்  ஈடுபட்டு அருகிலிருந்து கற்களை எடுத்து வீசி  தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இது தொடர்பாக தலைமைக்காவலர் வெங்கடேசன் வி-1 வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
 
வி-1 வில்லிவாக்கம்  காவல் நிலைய போலீசார்  விசாரணை செய்து   மேற்படி தலைமைக்காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த 1.சரவணன், வ/20, த/பெ.ராமகிருஷ்ணன், எண்.4/82,  டி-டைப், சிட்கோ நகர், வில்லிவாக்கம் 2.முரளி, வ/20, த/பெ.பிரபாகரன், எண்.43, 2 வது தெரு, வில்லிவாக்கம் 3.கார்த்திக், வ/21, த/பெ.முருகேசன், எண்.16, தெற்கு ஜெகன்நாதன் நகர், 8 வது குறுக்குத்தெரு, வில்லிவாக்கம் ஆகிய மூவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட  முரளி மீது  கொலை வழக்கு உட்பட 3 வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
 
கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி  சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *