*மாமனிதன் “திரைப்பட விமர்ச்சனம்

யுவன் ஷங்கர் ராஜாவின் ஒஎஸ்ஆர் தயாரிப்பில் ஸ்டுடியோ 9 ஆர்.கே.சுரேஷ் வெளியீட்டில் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சீனு ராமசாமி.
இதில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம், சாஜி சென், ஜெவெல் மேரி, கே.பி.ஏ.சி.லலிதா, அனிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு-சுகுமார், பிஆர்ஒ-நிகில்

தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரத்தில் ஆட்டோ ஒட்டுனராக  மனைவி காயத்ரி மகன் , மகள் அரசு பள்ளியில் படிக்கிறார்கள் குடும்பம் சந்தோஷமாக  பாசப் பிணைப்புடன் விஜய் சேதுபதி வாழ்ந்து வருகிறார். இவருக்கு நெருங்கிய நண்பர் குரு சோமசுந்தரம். விஜய் சேதுபதி ஆட்டோவில் பயணம் செய்யும் பள்ளி மாணவ ,மாணவிகள் தனியார் பள்ளியில் படிக்க கிறார்கள்  தன் பின்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்க விரும்புகிறார்  ஆட்டோ வருமானம்  போதவில்லை அந்த ஊரில் ரியல் எஸ்டெட் அதிபர் வீட்டு மனை விற்பனை செய்ய தயார் நிலையில் உள்ளார் .மனைகள் விற்பனை ஆகவில்லை விஜயசேதுபதி ரியல் எஸ்டெட் அதிபரை  சந்தித்து உங்கள் வீட்டுமனையை நான் விற்று தருகிறேன் எனக்கு இவ்வளவு சதவீதம் பணம் தர வேண்டும் முதலில் ரியல் எஸ்டெட் அதிபர் தர மறுக்கிறார் பிறகு ஒத்துக்கொள்கிறார் .அனைத்து வீட்டுமனையும் முன்பணம் வாங்கி தருகிறார் பத்திரபதிவு  தேதியில் ரியல் எஸ்டெட் அதிபர்  தலைமறைவு விஜய்சேதுபதி நம்பி பணம் கட்டியவர்கள் போலீஸ் புகார் கொடுக்க போலீஸ் வலைவீசி தேடுகிறது .மனைவி ,மகன் மகளைளிடமும் சொல்லி கொள்ளமால் ஊரைவிட்டு  ரியல் எஸ்டெட் அதிபரை தேடி கேரள செல்கிறார் அங்கு வயதான தாய் மட்டும் இருக்க, ஏமாற்றமடைகிறார். அங்கே வேறு இடத்தில் வேலை செய்து கொண்டு ரியல் எஸ்டெட் அதிபருக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

இன்னொருபுரம் பண்ணைபுரத்தில் விஜயசேதுபதியின் மனைவி குழந்தைகளை  குரு சோமசுந்தரம் உதவியால் கஷ்டப்பட்டு கல்லூரி வரை படிக்க வைக்கிறார். படிப்பு முடிந்ததும் வேலைக்கு செல்லும் மகனின் முதல் சம்பளத்தை காயத்ரி எடுத்துக்கொண்டு குரு சோமசுந்தரத்திடம் கொடுக்க செல்கிறார். ஆனால் குரு சோமசுந்திரம் அதை வாங்க மறுத்து விஜய் சேதுபதி இருக்கும் இடத்தையும்இ இதுநாள் வரை விஜய் சேதுபதி அனுப்பிய பணத்தில் தான் படிக்க வைத்ததையும் கூறுகிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியாகும் காயத்ரி அவரது மகன் மற்றும் குரு சோமசுந்தரத்துடன் கேரளா செல்கிறார். அங்கே விஜய் சேதுபதி ஊரை விட்டே சென்று விட்டதை அறிந்துசெய்வதறியாது தவிக்கிறார் இறுதியில் விஜய் சேதுபதியைகண்டுபிடித்தனர? பண்ணைபுரத்திற்கு அழைத்து வந்தார்களா? அவர் மேல் இருந்த வழக்கு என்னவானது? என்பதே மீதிக்கதை.

விஜய் சேதுபதி சாதாரண நடுத்தர மனிதராக அனைவருக்கும் அறிந்தவராக சகஜமாக பழகி எளிதாக மனதில் இடம் பிடிக்கும் குணம் கொண்டவராக முதலில் இருந்து பின்னர் ஏமாற்றப்பட்டதை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் பழி சொல்லுக்கு பயந்து வேறு வழியின்றி ஊரை விட்டே செல்லும் நிலைக்கு தள்ளப்படுவதை எண்ணி மனஉளைச்சலில் அழுது புலம்புவதாகட்டும் தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன். அனைவரும் மனதிலும் ஜொலிக்கிறார்.

கணவரை எண்ணி மனமுடைந்து புழுங்குவதாகட்டும், குழந்தைகளின் படிப்பிற்காக ஊர் மக்களின் ஏச்சு பேச்சுளை பொறுத்துக் கொண்டு வாழ்வதாகட்டும் கணவரை தேடி அலைவதாகட்டும் அச்சு அசலாக கிராமத்து பெண்ணாக வாழ்ந்திருக்கிறார்.

நல்ல பரந்த குணமுடைய இஸ்லாமிய நண்பராக குரு சோமசுந்தரம், ரியல் எஸ்டெட் அதிபராக சாஜி சென், ஜெவெல் மேரி, கே.பி.ஏ.சி.லலிதா, அனிகா ஆகியோர் கவனத்தை ஈர்க்கின்றனர்.

இளையராஜா மற்றும் யுவன்ஷங்கர் ராஜா இசை படத்தின் பக்கபலம்  கொடுத்துள்ளது.

சுகுமார் மண்ணின் வாசனை  காட்சிக்கோணங்களில் கிராமத்து சூழ்நிலைகளை அழகாக விவரித்துள்ளார்.
சந்தோஷமான வாழ்க்கை வாழும் மனிதன் சிறிய தவறால் சிக்கலில் மாட்டி குடும்பத்தை இழந்து விட்டு சென்று அவர்களுக்காக அயராக உழைத்து மாமனிதாக மாறும் நிலைமையை இதுவரை யாரும் சொல்லாத கதைக்களத்துடன் மிக பொருமையாக சொல்லியிருக்கிறார் நம்மையும் சில இடங்களில் காட்சிகள் கண்கலங்கி வை த்தது சீனு ராமசாமி. அவரின் பெரும் முயற்சிக்கும் உழைப்பிற்கும் பாராட்டுக்கள்.

மொத்தத்தில்  “மாமனிதன்” மனிதனின் உழைப்பையும்  நேர்மையும் உயர்த்தி பிடித்திருக்கு மக்கள் பார்த்து  கொண்டாடும் மகத்தான படம்.