பொம்மை* திரைப்பட விமர்சனம் :
ஏஞ்சல் ஸ்டூடியோஸ் எம்எச் எல்எல்பி நிறுவனம் தயாரிப்பில் எஸ்.ஜே. சூர்யா வழங்க ராதா மோகன் இயக்கியுள்ள படம் பொம்மை.
இதில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், சாந்தினி தமிழரசன், செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். . படத்தொகுப்பாளர் ஆண்டனி, கலை இயக்குநர் கே.கதிர், மக்கள் தொடர்பு AIM சதீஷ்.
ராஜகுமாரன் என்கிற ராஜு துணிக்கடை பொம்மைகளுக்கு வர்ணம் தீட்டும் ஒவியர்.சிறு வயதில் பள்ளி தோழி நந்தினி திருவிழாவில் காணாமல் போக அதிலிருந்த மனரீதியாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மருந்துகள் தினமும் சாப்பிடுவது பழக்கம் உள்ளவர். திடீரென்று மருந்துகள் சாப்பிடுப்பதை நிறுத்தி விடுகிறார். அதே சமயம் அவர் பொம்மைக்கு வர்ணம் தீட்டும்போது தான் சிறுவயதில் தவற விட்ட பள்ளிதோழி நந்தினியும் இந்த பொம்மையின் உருவமும் ஒரே ஒற்றுமையாக உள்ளது
என்று உணர்கிறார்.அன்று முதல் உயிருள்ள நந்தினியாக நினைத்து அந்த பொம்மையுடன் பேசும் வழக்கத்தை கொண்டு உள்ளார் .ராஜு (SJ சூர்யா) தன் அக்கா மகள் காதணி விழா விற்க்கு ஊர் சென்று திரும்பி வருகிறார் :அந்த பொம்மையை அந்த கடையின் சூப்பர்வைசர் விற்பனைக்கு அனுப்பி விடுகிறார். பொம்மையை காணாமல் திடுக்கிடும் ராஜு அந்த சூப்பர்வைசரை கொன்று விட்டு வேலையை விட்டு சென்று விடுகிறார். அந்த பொம்மையை தேடி அலைந்து திரியும் ராஜு கடைசியில் ஒரு பெரிய துணி கடை ஷோரூமில் இருப்பதை பார்த்து சாந்தினி உதவியுடன் அந்த கடையில் வேலைக்கு சேர்ந்து விடுகிறார். ராஜுவால் நந்தினி பொம்மையை தன் வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடிந்ததா? போலீஸ் ராஜு செய்த கொலையை கண்டுபிடித்து கைது செய்ததா? இறுதியில் ராஜுவின் மனரீதியான பிரச்சனையால் நேர்ந்த விபரீதம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
எஸ்.ஜே. சூர்யா மனரீதியாக பாதிக்கப்பட்ட இளைஞராக சில இடங்களில் அதிகமான நடிப்பும், சில இடங்களில் உணர்ச்சிகள் நிரம்பிய வசனங்களுடன் இயல்பாகவும் நடிக்க முயற்சி செய்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். பொம்மை காதலை தன் நினைவுகளோடு உருவகப்படுத்தி காதலுடன் படம் முழுவதும் வசனங்கள், பேசிகொண்டே வர்ணிப்பதிலேயே படத்தின் வேகம் குறைவாக நகர்ந்து செல்கிறது அவரது நடிப்பு மிகையாக உள்ளது .
நந்தினி பொம்மையாக ப்ரியா பவானி சங்கர் வரும் காட்சிகளில் அழகான பொம்மையாக, உயிர் உள்ள பெண் தேவதையாகவும் எல்லோரையும் கவர்ந்தார் எஸ்.ஜே. சூர்யாவை தன் வசம் வீழ்த்தி கொலைக்கும், தற்கொலைக்கும் தூண்டி விட்டு அவரை இம்சை செய்யும் நாயகியாக அற்புத மாத நடித்து உள்ளார்.
நந்தினி பொம்மையாக ப்ரியா பவானி சங்கர் வரும் காட்சிகளில் அழகான பொம்மையாக, எஸ்.ஜே. சூர்யாவை தன் வசம் வீழ்த்தி கொலைக்கும், தற்கொலைக்கும் தூண்டி அவரை இம்சை செய்யும் நாயகியாக அற்புதமாக நடிப்பு அசத்தியிருக்கிறார்
சாந்தினி தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்திற்கு சரியாக நேர்த்தியாக நடித்துள்ளார் .
இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்
யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை, ‘தெய்வீக ராகம்’ முத்தம் ஆகிய பாடல்கள் ரசிக்க வைக்கின்றன..
ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு வீடு, தொழிற்சாலை, துணிகடை ஷோரூம், கிராமபுறம், நகர்புறம் காட்சிகள் ஒளிப்பதிவு அருமையாக செய்துள்ளார்.
படத்தொகுப்பாளர் ஆண்டனி காட்சிகளை கட்சிதமாக கொடுத்து இருக்கிறார்
படம் முழுக்க வரும் விதவிதமான பொம்மைகளின் நம் பார்வைக்கு அழகாக காட்சிபடுத்தினார் கலை இயக்குநர் கே.கதிர் பாராட்டுக்குரியவர்.
பொம்மையை உயிருள்ள காதலியாக பாவிக்கும் மனரீதியான பாதித்த இளைஞனின் காதல் மனநிலை என்று புதுமையாக யோசித்தாலும் அதில் அழுத்தமான திரைக்கதை, சுவாரஸ்யமான சம்பவங்கள் ரசிக்கும்படி எதுவும் இல்லாமல் ஏனோ தானோ என்று திரைக்கதையில் கோட்டை விட்டு இயக்கியுள்ளார் ராதா மோகன்
பொம்மை மொத்தத்தில் இப்படம் பொம்மையாக தான் மனதில் நிற்கிறது