புதிய சயின்டிஃபிக் திரில்லர் ‘நகல்

S2S பிக்சர்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், A.R கிருஷ்ணா மோகன் இயக்கத்தில்,

சிவசக்தி கதாநாயகனாகவும் மும்பை மாடல் “ரிஷ்மா” நாயகியாகவும்,

நடிக்க இருக்கும்   ‘நகல்’ படம் ,

இன்று காலை  பூஜையுடன்  மங்களகரமாகத் துவங்கியது.  

இயக்குனர் சுப்பிரமணிய சிவா மற்றும் நடிகர் / ஒளிப்பதிவாளர் நட்டி  நட்ராஜ், 

ஆகியோர் சிறப்பு  விருந்தினர்களாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இன்றைய உலகத்தில் திரைப்பட இயக்குநர்கள் பல்வேறு புதுமையான  கோணத்தில் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார்கள்.அப்படி புதுமையான கதையம்சங்களுடன் பல  படங்கள் வருகின்றன .

அதில் மிகவும் விறுவிறுப்பான சயிண்டிபிக்திரில்லர் படமாக உருவாகவுள்ளது “நகல்” திரைப்படம்.நாயகி முன்னரே பல குறும்படங்களில் நடித்துள்ளார் 

 சதுர்த்தி ஐயப்பன் என்பவரின் கதை திரைக்கதையில்,F.s.பைசல் இசையில்,ஜோன்ஸ் ஆனந்தன் ஒளிப்பதிவில் உருவாகவுள்ள

இப்படத்துக்கு சண்டைப் பயிற்சி ஸ்டன்ட் சிவா.மணிவர்மா மற்றும் ஷரன் சந்தரம் ஆகியோர் கலை இயக்கத்தைக்  கவனிக்கின்றனர்.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தமிழின் முன்னணி நடிகர்கள் 

பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.  ஜுலை 9ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி 40  நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.படத்தின் 75% படபிடிப்பு சென்னையிலும்,மீதம் உள்ள படப்பிடிப்பு வெளிநாடுகளிலும் நடக்கவிருக்கிறது . பாடல்களை  ஊட்டியிலும் ,  மருத்துவ ரீதியிலான பல  காட்சிகளை வெளிநாடுகளிலும்  படமாக்கவுள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *