எடப்பாடி கே. பழனிசாமி: 8835 கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பு; விரைவில் இஸ்ரேல் பயணம் என அறிவிப்பு

எடப்பாடி கே. பழனிசாமி: 8835 கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பு; விரைவில் இஸ்ரேல் பயணம் என அறிவிப்பு

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த தமி ழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க் கிழமை அதிகாலை நாடு திரும் பினார். சுமார் 8800 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் வி ரைவில் இஸ்ரேல் செல்லவிருப்பதாகவும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளிநாட்டுச் சுற் றுப்பயணம் மேற்கொண்டார்.

ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்ட முதலமைச்சர் முதலில் லண்டன் நகருக்குச் சென்றா ர். அங்கே, அந்நாட்டில் செயல்படுத்தப்படும் அவசர ஆம்புலன்ஸ் சே வை, கொசுக்களைக் கட்டுப்படுத் து ம் நடவடிக்கை ஆகியவற்றைப் பார்வை யிட் டதோ டு, கிங்க்ஸ் கல்லூரி மருத்துவமனை தமிழ்நாட்டில் கிளைகளைத் திறப்பதற்கான ஒப்பந்தத் திலும் மு தலமைச்சர் கையெழுத்திட்டார்.மேலும் அங்குள்ள தொழிலதிபர்களையும் பிரி ட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர் சந்தித்துப் பேசினார்.

செப்டம்பர் ஒன்றாம் தேதி இங்கிலாந்திலிருந்து நியூயார்க் நகருக்குச் சென்ற முதல்வர், அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அமெரிக்க தொழி ல்முனைவோர் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார். பிறகு, சான் ஃப்ரான்சிஸ்கோவில் ஃபாக்ஸ்கான், லிங்கன் எலெக்ரிக்ஸ் நிறுவன அதிகாரிகளையும் அங்குள்ள தொழில் முத லீட்டாளர்களையும் சந்தித்துப் பேசினார். பஃபல்லோ மற்றும் கலிஃபோர்னியாவில் உள்ள கால்நடைப் பண்ணைகளையும் பார்வையிட்டார்.

 

 

அங்கிருந்து நாடு திரும்பும் வழியில் துபாய் சென்று, அங்குள்ள துபாய் தொழி ல்முனை வோர் ஆலோ ச னைக் கூட்டத்தில் விருந்தினராகக் கலந்து கொ ண்ட எடப்பாடி பழனிசாமி செவ் வாய்க்கி ழமை யன்று அதிகாலை மூன்று மணியளவில் சென்னை திரு ம் பினார்.13  நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய முதல்வர் பழனிசா மி க்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக் கப்பட்டது. அமைச்சர்கள், கட்சிப் பிரமுகர்கள், தொ ண்டர்கள் நேரில் சென்று அவரை வரவேற்றனர்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “இங்கிலாந்தில் மூன்று புரி ந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. மருத்துவப் பணியாளர்களின் பணித் திறன் மே ம்பட ஒரு ஒப்பந்தம், கிங்க்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் துவங்க ஒரு ஒப்பந்தம், டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த ஒப்பந்தம் ஆகியவை செய் ய ப்பட்டன. மேலும் அங்கிருப்பவர்களிடம் தொழில்முதலீடு செய்ய அழைப்பு விடு க்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவில் பஃபல்லோவில் உள்ள கால்நடைப் பண்ணைகளைச் சென்று பார்வை யிட்டோம். அது பயனுள்ளதாக இருந்தது. நியூயார்க் சென்று அங்குள்ள தொழில் முதலீட் டாளர்களைச் சந்தித்து, 2780 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. 17,760 நபர்களுக்கு இதன் மூலம் வேலை வாய்ப்புக் கிடை க் கும்.

பெட்ரோலியத் துறையில் நாஃப்தா, க்ராக்கர் யூனிட் அமைக்க பேச்சுவார்த்தை நடத்த ப்பட்டுள்ளது. 50,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். இதில் பல்லாயி ரம் பேருக்கு வேலை கிடைக்கும்.

நியூயார்க் நகரில் யாதும் ஊரே திட்டத்தைத் துவங் கியிருக்கிறேன். இதன் மூலம் வெளி நாட்டில் வசிக் கும் இந்தியர்கள், தமிழர்கள் இங்கே தொழில் துவங்க முடியும். சான் பிரான் சிஸ்கோ நகரில் மின்சாரத்தில் இயங்கும் கார் தொழிற்சாலையை பார்த்தோம். அவர்க ளை இங்கே தொழில் துவங்க அழைத்துள்ளோம். அதேபோல ப்ளூம் எனர்ஜி மாசில்லா எரி சக்தி நிறுவனத்தை பார்வையிட்டோம்.

அதற்குப் பிறகு, துபாயில் தொழில் முனைவோர் கூட்டத்தில் முதலீட்டாளர்களைச் சந்தி த்தோம். அங்கே 3780 கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்த்திருக்கிறோம். 6 புரிந்துண ர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பத்தாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். பல தொழி ல்முனைவோரை இங்கே தொழில் துவங்க அழைத்திருக்கிறோம்.

மொத்தமாக 8835 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளோம். 41 புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் செய்யப்பட்டுள்ளன. 35,520 பேருக்கு இதன் மூலம் வேலை வாய்ப்புக் கிடைக்கும்” என் று கூறினார்.

தமிழ்நாட்டில் தொழில் துவங்க முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளதாகவும் நீண்ட நாட்க ளாக தமிழ் நாட்டிலிருந்து எந்த முதலமைச்சரும் வெளிநாடு செல்லவில்லையென்ற குறை பாடு இருந்தது; அந்தக் குறைபாடு இப்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக் கிறார்.

வெளிநாட்டில் கோட் சூட் ஏன் அணிந்திருந்தீர்கள் என செய்தியாளர்கள் கேட்டபோது, வெளி நாட்டில் முதலீட்டாளர்களைச் சந்திக்கும்போது அவர்கள் உடையில் இருந்தா ல் தான் மரியாதை இருக்கும்; அவர்கள் விருப்பத்தை நாம் பூர்த்தி செய்ய வேண்டும் என முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.

முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் தெரிவித்திருப்பது குறித்துக் கேட்டபோது, தான் முதல்வரானது முதல் இப்போ துவரை அவர் எதிர்ப்புக் குரலைத்தான் தந்துவருகிறார். எரிச்சலில் பொறாமையில் இப்ப டிப்பட்ட வார்த்தைகளை உதிர்க்கிறார். வேறு அமைச்சர்களும் பல திட்டங்களைச் செய ல்ப டுத்த வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள் என முதலமைச்சர் பதிலளித்தார்.

தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த நினைத்திருப்பதாகவும் அடுத்ததாக இஸ்ரேல் செல்லவிருப்பதாகவும் முதல்வர் கூறினார்.

“நாம் ஒரு ஏக்கருக்குப் பாய்ச்சும் தண்ணீரை ஏழு ஏக்கருக்குப் பயன்படுத்துகிறார்கள். கழிவு நீரை மறுசுழற்சி செய்து விவசாயத்தில் பயன்படுத்துகிறார்கள். அதைப் பார்க்க வேண்டும். நமது மாநிலத்தில் அவ்வப்போது பருவமழை பொய்த்துவிடுகிறது. ஆகவே நீரைச் சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து அறிய இஸ்ரேல் செல்கிறேன்” என்று தெரி வித்தார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்லாமல், தமிழக அமைச்சர்கள் பலரும் தற்போது அரசு முறையில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண் டுள்ள னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *