“வேம்பு” திரைப்படம விமர்சனம்.

மஞ்சள் சினிமாஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர்   ஜஸ்டின் பிரபு வி,ஒளிப்பதிவு:குமரன் இசை:மணிகண்டன் முரளி ;  எடிட்டர் கே.ஜே.வெங்கட்ரமணன்

நடிகர்கள் ஹரி:கிருஷ்ணன்., ஹீரோயின்: ஷீலா ராஜ்குமார், மாரிமுத்து, ஜானகி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்

:வேம்பு’ திரைப்படம், கிராமத்தின் கதைக்களம்  நடுத்தர குடும்பத்தில் பெண்களின் கல்வி மற்றும் தமிழரின் பாரம்பரிய வீர அடையாளம்  தற்காப்புக் கலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு சிறந்த படைப்பாக அமைந்துள்ளது.

படத்தை பார்ப்போம்

புகைப்படக் கலைஞரான ஹரிகிருஷ்ணன் மற்றும் சிலம்பத்தில் ஆர்வமும், அரசு வேலைக்கான கனவும் கொண்ட ஷீலாவின் கதை. திருமணத்திற்குப் பின், ஒரு விபத்தில் ஹரிக்கு கண்பார்வை பறிபோக, குடும்பப் பொறுப்பையும், தன் சிலம்ப லட்சியத்தையும் ஷீலா தோளில் சுமக்கிறார். ஷீலாவின் சாதனையும், ஹரியின் கண்பார்வை மீட்பும் படத்தின் மையப் புள்ளிகள்.

பலங்கள்

நடிப்பு:

ஹரிகிருஷ்ணன் இயல்பான நடிப்பால், கண்பார்வையற்ற கணவனாகவும், மனைவியின் லட்சியத்திற்கு துணையாகவும் மனதில் நிற்கிறார்.

ஷீலா துணிச்சலான, பாசமுள்ள கிராமத்து பெண்ணாகவும், சிலம்ப வீராங்கனையாகவும் பளிச்சிடுகிறார்.

மாரிமுத்து (எம்.எல்.ஏ), ஜானகி (அம்மா) உள்ளிட்டோர் கதைக்கு ஏற்ற தேர்வாக அமைகின்றனர்.

இசை: மணிகண்டன் முரளியின் இசையில் ‘உப்பு மாங்கா புளி’, ‘மஞ்சனத்தி’ பாடல்கள் உற்சாகமூட்டுகின்றன. பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

ஒளிப்பதிவு: ஏ. குமரன் கிருஷ்ணகிரியின் மலைப்பகுதியின் இயற்கை அழகை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார்.

கருப்பொருள்: பெண்களின் கல்வி, தற்காப்புக் கலை, மற்றும் தன்னம்பிக்கையை மையப்படுத்திய கதை, சமூகத்திற்கு ஒரு நேர்மறையான கதை கொடுத்து இருக்கிறது

‘வேம்பு’ எளிய மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்களின் உணர்வுகளையும் இயல்பாகச் சித்தரிக்கும் ஒரு நெகிழ்ச்சியான படைப்பு. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டு பெற்ற இப்படம், எளிமையான கதைக்களத்தால் மனதைத் தொடுகிறது