“வெலிஸ்” (Velys) ரோபோடிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 500 நோயாளிகளுக்கு முழங்கால் மூட்டு மாற்று ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டது.

பிரசாந்த் மருத்துவமனை நகரத்தில் முதன்முறையாக நான்காவது தலைமுறை வெலிஸ் (Velys) ரோபோடிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 500 நோயாளிகளுக்கு முழங்கால் மூட்டு மாற்று ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்ட முதல் மருத்துவமனையாகி பெருமைப் பெற்றுள்ளது

 இம்மருத்துவமனையின் ரோபோடிக் முழங்கால் மூட்டு சிகிச்சை மையத்திற்கு தலைமை வகிக்கும் டாக்டர் ஆறுமுகம் S. மேம்பட்ட 4வது தலைமுறை வெலிஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 500 மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் என்ற மைல்கல்லை வெற்றிகரமாக கடந்திருக்கும் இந்தியாவின் முதன்மையான ஐந்து அறுவைசிகிச்சை நிபுணர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார்.

சென்னைஜூன் 27, 2025: சென்னையின் முன்னணி பன்னோக்கு மருத்துவமனைகளுள் ஒன்றான  பிரசாந்த் மருத்துவமனை, அதிநவீன 4ஆம் தலைமுறை வெலிஸ் ரோபோடிக் உதவி சாதனத்தைப் பயன்படுத்தி 500-க்கும் மேற்பட்ட ரோபோடிக் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கும் சென்னையின் முதல் மருத்துவமனை என்ற பெருமையைப் பெற்றுள்ளது. துல்லியமான எலும்பியல் சிகிச்சையில் இதுவொரு மிகப்பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. இந்தியாவில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது ஒரு முக்கியமான நேரத்தில் எட்டப்பட்ட மைல்கல் சாதனையாகும். பிரசாந்த் மருத்துவமனையின் முதுநிலை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும்மூட்டு மாற்று சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஆறுமுகம் S. இந்த இச்சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.  4ஆம் தலைமுறை வெலிஸ் ரோபோவை பயன்படுத்தி 500 மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை முடித்த இந்தியாவின் முதன்மையான ஐந்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் பட்டியலில் இவரும் இப்போது இடம்பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 அறுபது வயதைத் தாண்டிய முதியவர்கள் மத்தியில், கீல்வாதம் அதுவும் குறிப்பாக முழங்கால்களில் மிக அதிகமாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணங்கள், உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை, உடல் பருமன் மற்றும் முதுமை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. எலும்பியலுக்கான இந்திய ஆய்விதழின்படி, இந்தியாவில் முழங்கால் கீல்வாதம் என்பது, மேற்கு நாடுகளைக் காட்டிலும் 15 மடங்கு அதிகமாக இருப்பது அறியப்பட்டுள்ளது. இதனால், துல்லியமான சிகிச்சை முறை மிகவும் அவசியமாக மாறியிருக்கிறது. பிரசாந்த் மருத்துவமனை அடைந்திருக்கும் இந்த மைல்கல் சாதனையானது, மருத்துவத் துறையில் ஒரு புதிய அளவுகோலை நிர்ணயித்திருக்கிறது.  இயற்கையான முழங்கால் மூட்டு செயல்பாட்டைப் போலவே, உடற்கூறு ரீதியாக சீரமைக்கப்பட்ட, சுழற்சி ரீதியிலான முழங்கால் இயக்கத்தை மேற்கொள்ள இச்சிகிச்சை உதவுகிறது. இதன் பலனாக, மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கும் காலம் குறைவதுடன், வேகமாக குணமடைவதும்  சாத்தியமாகிறது. இச்சிகிச்சை பெற்ற நோயாளிகள் ஒரு நாளுக்குள்ளேயே நடக்கத் தொடங்கி, ஒரு மாதத்திற்குள் ஏறக்குறைய இயல்பான நடமாட்டத்திறனை பெற முடியும் என்பது இச்சிகிச்சையின் சிறப்பாகும்.

 இந்நிகழ்வின்போது உரையாற்றிய பிரசாந்த் மருத்துவமனைகளின் மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவரும்மூட்டு மாற்று சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஆறுமுகம் S. கூறியதாவது: “நீரிழிவு பாதிப்பில் முதலிடம் வகிப்பது போலவே, கீல்வாத பாதிப்பிற்கான உலகின் தலைநகராக இந்தியா மெதுவாக மாறி வருகிறது. 50 வயதுகளின் முற்பகுதியில் உள்ள இளம் வயதினரிடம் கூட முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதை இப்போது நாங்கள் காண்கிறோம். அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்களிலேயே அவர்கள் வலியின்றி நடப்பதைப் பார்ப்பது  மருத்துவத்தில் இத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றம் எவ்வளவு முக்கியமானது என்பதை வலுவாக உணர்த்துகிறது. ‘அனைவருக்கும் ஒரே தீர்வு’ என்ற அணுகுமுறையை ரோபோடிக் தொழில்நுட்பம் கடந்து முன்னேற்றம் கண்டிருக்கிறது. இது,

ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட முறையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்படுகின்ற துல்லியமான சீரமைப்பைச் செய்ய எனக்கு உதவியிருக்கிறது. இதுவரை பின்பற்றப்பட்ட வழக்கமான சிகிச்சை உத்திகளால் வழங்க முடியாத ஒன்றாக இது இருக்கிறது. மிகவும் துல்லியமான, தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் பயனளிக்கும் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதற்கு இது வழிவகுத்திருக்கிறது. இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவெங்கிலும் பணியாற்றும் ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு வழிகாட்டல் யோசனைகளை வழங்கும் நிபுணராகவும் நான் இருப்பதால்,  ஒவ்வொரு நிலையிலும் தொழில்நுட்பமானது எவ்வாறு மருத்துவ சிகிச்சையை மேம்படுத்தி, மாற்றியமைத்து வருகிறது. என்பதைப் பார்ப்பது உண்மையிலேயே மனநிறைவளிக்கிறது.”

60 வயதுக்கு மேற்பட்ட 10 இந்தியர்களில் 1 நபரை மட்டுமே முன்பு பாதித்த கீல்வாதம் / மூட்டுவலி, இப்போது 3 முதல் 4 நபர்கள் வரை பாதிக்கிறது. கடுமையான பாதிப்புகள் 40 மற்றும் 50 வயதின் முற்பகுதியிலுள்ள இளம் வயதினரிடம் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இந்த அதிகரிப்புக்கு உடல் உழைப்பற்ற சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை, உடல் பருமன், உடற்பயிற்சியின்மை மற்றும் நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்து வேலை பார்ப்பது ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன.  பிரசாந்த் மருத்துவமனையில் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களில் 75% க்கும் அதிகமானோர் பெண்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது நாடு முழுவதும் காணப்படும் ஒரு பொதுவான போக்காகும். இந்த பரந்த போக்கினைப் பிரதிபலிக்கும் வகையில், ரோபோடிக் சாதனங்களின் பயன்பாடும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் கூட வேகமாக விரிவடைந்து வருகிறது. இது எளிதில் அணுகக்கூடிய, துல்லியமான மற்றும் நோயாளிக்கேற்ற எலும்பியல் சிகிச்சையை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றப் படிநிலையாகும்.

பிரசாந்த் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணாஇந்த தொழில்நுட்ப முன்னேற்றத்தின் பின்புலத்திலுள்ள அடிப்படையான தொலைநோக்கு குறிக்கோள் குறித்து கீழ்க்கண்டவாறு பகிர்ந்து கொண்டார்: “சமீபத்திய 4வது தலைமுறை வெலிஸ் ரோபோவைப் பயன்படுத்தி, 500-க்கும் மேற்பட்ட ரோபோடிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்த முதல் மருத்துவமனை என்ற பெருமையை நாங்கள் பெற்றிருக்கிறோம்; மேம்பட்ட சுகாதார சேவையை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லை பிரசாந்த் மருத்துவமனை எட்டியிருப்பதை இச்சாதனை குறிக்கிறது. இது வெறும் எண்களைப் பற்றியது மட்டுமல்ல; துல்லியமான சிகிச்சையின் மூலம் நோயாளிகள் அவர்களது முழங்கால் மூட்டுகளில் இயக்கத்திறனையும் மற்றும் நம்பிக்கையையும் மீண்டும் பெற உதவுவதை குறித்ததாகும். ரோபோடிக் சாதன உதவியுடன் கூடிய அறுவை சிகிச்சை, இயல்பான முழங்கால் இயக்கத்தை சிறப்பான துல்லியத்துடன் நகலெடுக்க உதவுகிறது.  இதன் விளைவாக நோயாளிகள்

 

விரைவாக குணமடைவதுடன், சிறந்த நீண்ட கால விளைவுகளையும் பெறுகின்றனர். இந்தியா முழுவதும் ரோபோடிக் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், எலும்பியல் சிகிச்சைக்கு வெலிஸ் மற்றும் மென்திசு அறுவை சிகிச்சைகளுக்கு SSI மந்திரா ஆகிய இரண்டு உத்திகளையும் ஒருங்கிணைப்பதில் பிரசாந்த் மருத்துவமனை முன்னோடி மருத்துவமனைகளுள் ஒன்றாக இருந்து வருகிறது.  இதன் மூலம், ஒரே மருத்துவமனையின் கீழ் பல்வேறு சிறப்புத் துறைகளில், ரோபோ சாதனத்தின் திறன்களை சிறப்பாக பயன்படுத்தும் தமிழ்நாட்டின் சில மருத்துவ மையங்களுள் ஒன்றாக நாங்கள் புகழ்பெற்றிருக்கிறோம்.  உலகத்தரம் வாய்ந்த கண்டுபிடிப்புகளை சென்னை மாநகருக்கு கொண்டு வருவதன் வழியாக உலகத்தரத்திலான சிகிச்சையை இங்கு வழங்குவது எங்கள் நோக்கமாக எப்போதும் இருந்து வருகிறது, மேலும், இச்சாதனை, அதிநவீன சிகிச்சை பராமரிப்பின் மூலம் நோயாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்தி மாற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.” 

பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ் குறித்து: பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ் என்பது, தொழில்முறை நிபுணத்துவமும், பயிற்சியும் பெற்ற நிபுணர்களைக் கொண்டு நவீன, உயர்தர உடல்நல சிகிச்சை சேவைகளை வழங்குகின்ற பன்முக சிறப்பு பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு பிரபல மருத்துவமனையாகும்.  சென்னையில், வேளச்சேரி மற்றும் கொளத்தூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பிரசாந்த் சூப்பர் – ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, இம்மாநகரில் சிறந்த சிகிச்சைக்கு சிறப்பாக அறியப்படும் மல்ட்டி – ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுள் ஒன்றாகும்.  நோயாளிகளுக்கு மிக நேர்த்தியான உடல்நல பராமரிப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவ நிலையமாக உருவாவதே இதன் தொலைநோக்கு திட்டமாகவும், குறிக்கோளாகவும் இருக்கிறது. சிறந்த, தரமான சிகிச்சையை வழங்குவதன் மூலம் நோயாளிகளின் நம்பிக்கையை பெறுவது இம்மருத்துவமனை குழுமத்தின் செயல் இலக்காக இருக்கிறது.  தரமான சிகிச்சை பராமரிப்பு, மரியாதை, உயர் செயல்திறன், சிகிச்சையின் பயனளிக்கும் தன்மை, பாதுகாப்பு, மக்கள் மத்தியில் ஆரோக்கியம் மீதான விழிப்புணர்வை உருவாக்குவது ஆகிய மதிப்பீடுகளைச் சார்ந்தே பிரசாந்த் சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.  எந்தவொரு நோய் பாதிப்பிற்கும் உரிய மருத்துவ பரிசோதனைகள்,  நோயறிதல்களுக்கும் மற்றும் அவைகளுக்குரிய சிகிச்சைகளுக்கும் பல்வேறு ஆரோக்கிய பராமரிப்பு தொகுப்பு திட்டங்களையும் பிரசாந்த் சூப்பர் – ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்ஸ் வழங்கி வருகிறது.