“ஆர்யன்”திரை விமர்சனம்.

படத்தை பார்ப்போம்

ஆர்யன் படத்தின் ஆரம்பமே மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

செல்வராகவன் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தொகுத்து வழங்கும் டிவி நிகழ்ச்சிக்கு வருகிறார் நிகழ்ச்சி தொடங்குகிறது  பார்வையாளர் இருக்கையிலிருந்து ஒரு குரல் வருகிறது  அந்த அரங்கத்தில் இருப்பவர்களை திரும்பி பார்க்க வைக்கிறது சிறிது நேரத்தில் அரங்கத்தை தன்   கட்டுப்பாட்டில் வைத்து கொள்கிறார். தன் கொலை திட்டம் பற்றி பேசுகிறார் செல்வராகவன் ஐந்து 5 நாட்களில் ஐந்து கொலைகள் செய்யப் போவதாக கூறுகிறார் பிறகு.தன்னை தானே துப்பாக்கியால்  சுட்டு கொள்கிறார் இதையடுத்து அவர் சொன்னது மாதிரியே அடுத்த நாள் ஒரு கொலை நடக்கிறது. கொலையாளியே இறந்துவிட்ட பிறகு மீதமுள்ள கொலைகள் எப்படி நடக்கும் என்று போலீஸார் தலையை பிய்த்துக் கொள்கின்றனர். இந்தச் சூழலில் தனது திருமண வாழ்க்கையில் இக்கட்டான சூழலில் இருக்கும் போலீஸ் அதிகாரியான  விஷ்ணு விஷால் இந்த வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. செல்வராகவன் சொன்னது போல அந்த கொலைகள் நடந்ததா? ஹீரோவின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட அந்த வழக்கு என்ன ஆனது?சீரியல் கொலை செய்யும் செல்வராகவனை போலீஸ் அதிகாரி விஷ்ணு விஷால் தடுத்து நிறுத்தினரா எப்படி நடந்தது

ல்வராகவன் நோக்கம்தான் என்ன என்பதே ‘ஆர்யன்’ படத்தின் மீதிகதை.

டிசிபி நம்பியாக சிறப்பாக நடித்துள்ளார் விஷ்ணு விஷால். ஆக்ஷன் காட்சிகளில் அசத்துகிறார். காக்கிச் சட்டை அவருக்கு பொருத்தமாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். விஷ்ணு விஷாலை தாடி மீசை இல்லாமல் கிளீன் ஷேவ் லுக்கில் பார்ப்பது வித்தியாசமாக இருக்கிறது. ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.