“ரூம் பாய்” திரை விமர்சனம் .

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்திருக்கும்” ரூம் பாய்” படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ஜெகன் ராயன்.

கதாநாயகன்  சி.நிகில் (சஞ்சய்), நாயகி ஹர்ஷா (நிஷா), இமான் அண்ணாச்சி (சன்னி ஃபன்னி அண்ணாச்சி), பிர்லா போஸ் (சந்துரு), யூடியூப் புகழ் காத்து கருப்பு கலை (பிச்சாண்டி), இன்ஸ்டா புகழ் கற்பகம் (சுமதி), கவிதா விஜயன் (இனியா), சமீர் (ஜேம்ஸ் ஜாகிரியா), சிட்டி ராஜா (டிபிடி குணா), அருண்ராஜா (வில்லன்), பிரபாகர் (இன்பதுரை), கேரளா பெஹமின் (ஷாலினி) ஆகியோர் நடிக்க இவர்களுடன் மும்பை மாடல் அழகி நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :-ஒளிப்பதிவு – சி.பாரதி ராஜன் டிஎஃப்டி, பாடல்கள் – சூரியமூர்த்தி, இசை – வேலன் சகாதேவன் , படத்தொகுப்பு – டி.வி.மீனாட்சி சுந்தர், நடனம் – தினா, ஸ்டண்ட் – கார்த்திக் வர்மன் , உடைகள் – வளையாபதி , , மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்

படத்தை பார்ப்போம்

சிறார் கூர்நோக்கு பள்ளியின் வார்டனாக இருக்கும் பிரபாகர் காணவில்லை யென்று அவருடைய மகள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார் .காவல்துறை தீவிர தேடுதல் தொடங்குகிறது. இன்னொரு புறம் சிறார் கூர்நோக்கு பள்ளியிலிருந்து வெளியே வரும் நிகில் (சஞ்சய்) வேலை தேடி தன் சித்தப்பா வசிக்கும் ஏலகிரிக்கு செல்கிறார். அங்கே சன்னி பன்னி ஹோட்டலை நடத்தும்  இமான் அண்ணாச்சி) யிடம் வேலைக்கு சேர்கிறார். அங்கே  காத்து கருப்பு கலை நட்பு கிடைக்க, சில காரணங்களால் இருவரும் இந்த ஓட்டலில் வேலையை விட்டு  அதே ஏரியாவில்   பிரபலமான குயின் மார்க் ஹோட்டலில் ‘ரூம் பாய்’ வேலைக்குச்  இருவரும் சேர்கிறனர். அந்த ஹோட்டல்  வெளிப்பார்வைக்கு  பிரம்மாண்டமாக அழகாவும்  அமைதியாகவும், வசதியாகவும் இருந்தாலும்  அந்த ஹோட்டலின் மேனேஜர்  பிர்லா போஸ்  அங்கு வேலை பார்க்கும். ஊழியர்களை அடிமைகளாக நடத்தபடுகிறது   கொடூரகாரன்  ஊழியர்கள் தப்பிக்க நினைத்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை அப்படி அந்த ஓட்டலில் என்ன தான் நடக்குது பார்ப்போம் .இளம் ஜோடிகளின் அந்தரங்கம் /பெரும் பணக்காரன், கள்ள உறவுக சமூக விரோத செயல் ரகசிய சந்திப்பு  இவர்களை ரகசிய கேமேர வைத்து  படம் பிடித்துத்தை வீடியோவில் படம் பிடித்து, அவர்களை மிரட்டி பணம் பறித்தல்,   இதற்கிடையில், ஏலகிரியை சுற்றிப் பார்க்க வரும் வெளிமாநில பெண் ஹர்ஷா தன் குடும்பத்தினருடன் ஹோட்டலில் வந்து தங்குகிறார். ஒட்டலில்  வேலை பார்க்கும் நாயாகனும்  ஹர்ஷாவுக்கும் இடையே நட்பு காதல் மலர்கிறது  சுற்றுபயணம் முடிந்தது ஹர்ஷா தன் சொந்த மாநிலத்திற்க்கு செல்கிறாள்  இந்நிலையில்  கதாநாயகணை தேடி போலீஸ் குயின் மார்க் ஓட்டலுக்கு வருகிறது  கதாநாயகனின் பிளாஷ் பேக்  ஆரம்பம் ,சிறார் கூர்நோக்கு பள்ளியின் வார்டன் கிடைத்தாரா ? நாஙகளை போலீஸ் தேடி வர காரணம் என்ன? வெஸ மாநில பெண்ணுடன் காதல் மலர்ந்ததா? குயின் மார்க் ஹோட்டலில் நடக்கும் சட்டவிரோத  செயல் செய்வது யார் ? யாரும் யூகிக்க முடியாத  பல திருப்பங்களு  படத்தின் மீதி கதை..