ஜோய்ஆலுக்காஸ் நிறுவனம் நாடு தழுவிய இரத்த தான முகாம்கள் மூலம் உலக இரத்த தான தினத்தை கொண்டாடியது.
சென்னை (ஜூன் 17, 2026): உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு, ஜோய்ஆலுக்காஸ் குழுமம் நாடு முழுவதும் உள்ள தனது ஷோரூம்களில் இரத்த தான முகாம்களை புதன்கிழமையன்று ஏற்பாடு செய்திருந்தது. இக்குழுமத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு (CSR) பிரிவான ‘ஜோய்ஆலுக்காஸ் அறக்கட்டளை’ (Joyalukkas Foundation) தலைமையில் நடைபெற்ற இந்த நாடு தழுவிய இரத்த தான இயக்கத்தில் ஊழியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
திருச்சூரில் உள்ள ஜோய்ஆலுக்காஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இரத்த தான முகாமை, ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் ஜோய் ஆலுக்காஸ் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர். ஜோய் ஆலுக்காஸ், உயிர்களைக் காக்கக்கூடிய மிகச் சிறந்த மனிதாபிமானச் செயல்களில் ஒன்று இரத்த தானம் என்று குறிப்பிட்டார். தன்னார்வ இரத்த தானம் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில் இந்தியா முழுவதும் இத்தகைய முகாம்களைத் தங்கள் குழுமத்தால் ஏற்பாடு செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய மருத்துவச் சங்க (IMA) இரத்த வங்கியின் இயக்குனர் டாக்டர் கோபிநாத், IMA மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர். ஜோசப் ஜார்ஜ், ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் இயக்குனர் ஜாலி ஜோய் ஆலுக்காஸ் மற்றும் குழுமத்தின் பிற மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

