மாசாணி பிக்சர்ஸ் சார்பில் ராஜசேகர்.ஆர் தயாரித்திருக்கும் “வடம்” படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கேந்திரன்.வி
நடிகர்கள்;
விமல் –நடராஜ் (நட்டி) , ன்ஷ்கா ஸ்ரீ- , இந்து ,தீபா சங்கர் – முனிஷ்காந்த் – நரேன் , பாலா சரவணன் – மதுசூதனன் – – ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
ஒளிப்பதிவு: பிரசன்னா எஸ் குமார், எடிட்டர்;: சாபு ஜோசப் வி ஜே, கலை: வி.சசிகுமார், இசை: டி.இமான், பாடல் வரிகள்: ஞானகரவேல், சண்டைக்காட்சிகள்: ஜி.என்.முருகன், நடன இயக்குனர்: தினேஷ், தீனா என்.சங்கர்,மக்கள் தொடர்பு: சதீஷ் எஸ்2 மீடியா
படத்தை பார்ப்போம்:
சிவகங்கை மாவடத்தில் வட மஞ்சு விரட்டு தான் பிரபலம். அந்தந்த வீடுகளில் இருக்கும் காளைகள் தான் அவர்களுக்கு பெருமை. அதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்து காளைகளை பராமரித்து அதனை வட மஞ்சு விரட்டுக்கு தயார் செய்து களத்தில் இறக்கி விடுவார்கள்.அதுமட்டுமில்லாமல் அடிமாட்டுக்கு அனுப்பப்படும் மாடுகளைத் தனது பாதுகாப்பில் வைத்து பராமரித்துவருகிறார் அவரது மகன் விமலும் தந்தையைப் போலவே மாடுகள் மீது பாசம் கொண்டவர். கைவிடப்பட்ட கன்றுக் குட்டியைத் தனது வீட்டில் வளர்த்து பயிற்சி அளித்து மஞ்சு விரட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறது வெற்றி பெற்ற காளையை இந்த கன்றுகுட்டி என் வீட்டில் தான் பிறந்தது எனக்கு தான் சொந்தம்உரிமை கொண்டாட நட்டி வருகிறார் .ஒரு கொலை வழக்கில் சிக்கி நிபந்தனை ஜாமீனில் வெளியே வரும் விமல் மீது நீதிமன்ற வளாகத்திலேயே வெறித்தனமான தாக்குதல் உயிர் பிழைத்தார்! எதிரிகள், வீட்டுக்குள்ளே கூட அவரை கொல்லத் திட்டமிடும் மனிதர்கள் என பல திசைகளில் இருந்து பகைமைகள் சூழ்ந்து வருகிறது விமலின் காதலி விமலை கத்தியால் குத்துகிறாள்,! இந்த நேரத்தில் நரேன் குடும்பத்திற்கு ஆவாத ஒருவர் விமலை கொல்ல,ஊர் ஊராக போய் ஆள் தேடுகிறார் இவர்கள் யார்? விமல் இந்த எதிரிகளிடமிருந்து தப்பித்தாரா, என்ன என்பதே பல திருப்பங்களுடன் படத்தின் மீதிக்கதை,.

