இந்தியாவில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ளும் ஆல்டென் இந்தியா நிறுவனம்

இந்தியாவில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ளும் ஆல்டென் இந்தியா நிறுவனம்

பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளில் உலகில் முன்னணியில் இருக்கும் ஆல்டென் குழுமம் சென்னையில் கூடுதல் அலுவலகத்துடன் தனது இந்திய செயல்பாடுகளை விரிவுபடுத்துகிறது

சென்னை, இந்தியா – பிப்ரவரி 22, 2023: ஆல்டென் குழுமத்தின் துணை நிறுவனமான ஆல்டென் இந்தியா, இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்துகிறது. பெங்களூர் மற்றும் புனேவை தொடர்ந்து இந்தியாவின் பிற நகரங்களில் தனது விரிவாக்க பணிகளை தொடர்ந்து வருகிறது.

இந்த விரிவாக்கத்தின் மூலம் ஆல்டென் இந்தியா அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இந்தியாவில் அதன் பணியாளர்களை இரட்டிப்பாக்க உள்ளது. மனிதவளத்தில் இந்த மிகப்பெரிய முதலீட்டின் மூலம், குழுமத்தின் ஒட்டுமொத்த வருவாயில் ஆல்டென் இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அதன் செயல்பாடுகள் மூலம் நிறுவன வருவாயில் 100% வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆல்டன் குழுமத்தின் ஆசிய பசிபிக் தலைவர் பாஸ்கல் அமோர் கூறுகையில், இந்தியாவில் பல்வேறு வகையான திறமைகள் உள்ளதால், புதிய தொழில்நுட்பப் பகுதிகளுக்கு எங்களது குழுமத்தை தயார்படுத்திக்கொள்ள இது உதவும். இந்தியாவில் முதலீடு செய்வது முதலாளி மற்றும் பணியாளர் இருவருக்கும் வெற்றிகரமான சூழ்நிலையாக உள்ளது.

ஆல்டென் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உத்தம்குமார் சங்க்பால் கூறுகையில், “இந்த புதிய அலுவலகத்தில் அதிக பணியாளர்களை அமர்த்துவதன் மூலம் ஆல்டென் இந்தியா எங்கள் உலகளாவிய வணிகத்திற்கு பெரும் பங்களிப்பு அளிக்கவுள்ளது. அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் தொழில்நுட்ப ரீதியாக அதிக வளர்ச்சியைப் எதிர்பார்க்கிறோம், மேலும் இது இந்திய இளைஞர்களுக்கு தங்கள் வாழ்க்கையில் உயர வாய்ப்பாக அமையும். இந்தியாவில் நிறைய திறன் வாய்ந்த இளைஞர்கள் உள்ளனர். இதன் காரணமாக இந்தியாவில் அதிக முதலீடு செய்து தொழில்நுட்பங்களை உருவாக்க ஆல்டென் குழுமம் முடிவு செய்துள்ளது. திட்டமிடல் முதல் சந்தைக்குப் பிந்தைய சேவைகள் வரை, ஆல்டென் இந்தியா பல்வேறு களங்களில் ஏராளமான சேவைகளை உள்ளடக்கிய நிறுவனமாகும்” என்று கூறினார்.
ஆல்டென் குழுமம் பற்றி:

புதுமை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப தகவல் அமைப்புகள் ஆகிய துறைகளில் ஆல்டென் அதன் வாடிக்கையாளர்களின் மேம்பாட்டு உத்திகளுக்கு சேவைகளை வழங்குகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் 30 நாடுகளில் செயல்பட்டு வருவதன் மூலம் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளில் உலகின் முன்னணி நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் கடற்படை, பாதுகாப்பு, வாகனம், ரயில், எரிசக்தி, ஆயுள் அறிவியல், நிதி, சில்லறை வணிகம், தொலைத்தொடர்பு மற்றும் சேவைகள் ஆகிய துறைகளில் பல்வேறு பெரும் நிறுவனங்களுடன் பணியாற்றி வருகிறது. 3.78 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான நிதி விற்றுமுதலுடன், தற்போது உலகம் முழுவதும் 54,100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.