“எனக்கு End-யே கிடையாது” திரைப்பட விமர்சனம்

கால் டாக்ஸி டிரைவர் சேகர், ஒரு அழகான கவர்ச்சியான இளம்பெண் ஊர்வசியை நள்ளிரவு நேரத்தில் அவரது இல்லத்தில் ட்ராப் செய்வதற்காக செல்கிறார்.  அங்கு அந்த இளம்பெண் சேகரை வீட்டுகுள் வர வைத்து மது விருந்து கொடுகிறாள் இருவரும் ஹேப்பியாக இருக்கிறார்கள் சிறிது நேரத்தில் ஊர்வசி இறந்து விடுகிறார் சேகருக்கு சில விஷயங்கள் தெரியவருகிறது அங்கிருந்து வெளியேற நினைக்கும் சேகருக்கு வெளியே செல்ல வீட்டின் கதவுகள் திறக்க பாஸ்வேர்ட்ஸ் (passward) தெரியவில்லை கடைசியில்

சேகர் அங்கிருந்து வெளியே வந்தாரா? இல்லையா? இவர் சந்தித்த பிரச்சனைகள் என்னென்ன அதைத் தொடர்ந்து அந்த வீட்டிற்குள் நடக்கும் எதிர்பாராத திருப்பங்களும், இதனால் சேகர் வாழ்க்கை என்னவானது என்பதும் தான் “எனக்கு End-யே கிடையாது திரைப்படத்தின் கதை.

படம் ஆரம்பிக்கும்  போது திரைகதையில் வேகம் அடுத்து எங்குமே குறைவதே இல்லை. சேகர் ஊர்வசியின் வீட்டுக்குள் நுழைகின்ற அந்த  நேரத்தில் எதிர்பார்ப்பது எல்லாம் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பது தான். நாம் என்ன எதிர்பார்த்தோமோ  அது அப்படியே நடந்ததால் படத்திற்க்குள் இருந்து நாம் வெளியே வரமுடியவில்லை

அதிலும் சேகரும் ஊர்வசியும் சேர்ந்து டகீலா முறையில் குடிக்க ஆரம்பிக்கின்றனர் . மது அடிக்கும் காட்சியைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு முறையாவது டகீலாவை ருசி பார்த்து விட வேண்டும் என்கின்ற எண்ணம் வருகிறது அக்காட்சி அனைவரையும் ஒன்ஸ்மோர் கேட்க தோன்றும் அனைவரும் வரவேற்க்கும் காட்சிகள் .  சேகர் மற்றும் ஊர்வசியாக நடித்திருக்கும் விக்ரம் ரமேஷ் மற்றும் ஷ்வாயம் சித்தா இருவரும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.  விக்ரம் ரமேஷ் நாயகனாக நடித்திருப்பதோடு இப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார்.

 

 

டேவிட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஹங்ரி வூல்ஃப் புரொடெக்‌ஷன்ஸ் சார்பாக இப்படத்தை தயாரித்திருக்கிறார்.  மஸ்தான் பாய் வேடத்தில் நடித்திருக்கும் சிவக்குமார் ராஜுவும் அமர்களப்படுத்தி இருக்கிறார்.

மொத்தக் கதையும் ஒரு வீட்டிற்குள்ளேயே நடந்தாலும், சுவாரஸ்யம் சற்றும் குறையாதபடிக்கு  வித்தியாசமான கதைகளம் மற்றும் ஒளியமைப்புகள் மூலம் காட்சியை வடிவைமைத்து  படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார்.  கலாசரணின் இசையும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருக்கிறது.

ஒரு கட்டத்தில் ஒட்டு மொத்த கதாபாத்திரங்களும் ஒரே வீட்டிற்குள் அடைபடும் போதும் திரைக்கதையில் ஒரு தொய்வு ஏற்படுகின்றது. ஆனால் அதைத் தொடர்ந்து நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகள் அந்த பலவீனங்களை மறக்கடித்து மீண்டும் திரைக்கதையை வலுவாக்கிவிடுகிறது.

க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் ட்விஸ்ட் யாரும் எதிர்பாரதது .

மொத்தத்தில் “எனக்கு End-யே கிடையாது” திரைப்படம்  கண்டிப்பாக அனைவரையும் ரசிக்கும்படி வைத்துள்ளது ஒரு நல்ல Entertainment…