ஆண்டு விழா sensei அகாடமி மற்றும் தற்காப்பு கலை விருகம்பாக்கம் சென்னை
250க்கு மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் இந்த sensei அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்தாண்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பல பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா.
உயர்திரு கௌதம், துணை கண்காணிப்பாளர் வடபழனி காவல் நிலையம் அவர்கள் அனைத்து வீரர்களையும் பாராட்டி மற்றும் தற்காப்பு கலையின் அவசியம் முக்கியத்தையும் கூறி தன் உரையை முடித்தார்.
நடன இயக்குனர் கலைமாமணி ஸ்ரீதர் அவர்களும் நடிகை குமாரி அக்ஷயா ஸ்ரீதர் மற்றும் திரு அரசு மாஸ்டர் ஆணழகன் பட்டத்தை வென்றவர் அவர் பழக்கம் வென்றவர்களை பாராட்டி மற்றும் உடலை எப்படி கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார், அதேபோல Mr கார்த்தீஸ்வரன், உலக ஆணழகன் பட்டத்தை வென்றவர், அவர் கூறுகையில் உடல் பயிற்சியின் முக்கியத்தையும் பயிற்சி செய்யும் மற்றும் இந்த தற்காப்பு கலை ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டிருப்பதையும் சொல்லி வீர வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி பேசினார். மற்றும் இந்த விழாவில் வழக்கறிஞர் திரு பிரபு அவர்களும் கலந்து கொண்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார். நடிகர் Arnav அவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி அனைத்து வீரர் மற்றும் வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி பேசினார். இந்த விழாவில் வீராங்கனைகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டு இந்த விழாவினை சிறப்பு செய்தார்கள். இந்த ஆண்டிற்கான சிறந்த வீராங்கனியாக செல்வி R.பிரணிடா தேர்வு செய்யப்பட்டார் மற்றும் இந்த விழாவினை அழகாக தொகுத்து வழங்கியது
திருமதி சன்மதி, விழாவின் சிறப்பாக ஏற்பாடு செய்தது திரு Sensei ரத்தினம் அவர்கள்.

